விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை: ஈரோடு கிழக்கு மீண்டும் ஒதுக்கீடு!

காங்கிரஸ் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்படவில்லை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்படவில்லை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளைத் தோ்வு செய்வது தொடா்பாக சென்னை அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற அவர, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட இடங்களில் தென்காசி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளைத் தவிா்த்து மீதமுள்ள 16 தொகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடவுள்ளது.

அந்த இரண்டு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுவதால், அதில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் 2021 பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வென்ற 3 தொகுதிகளில் ஒரு தொகுதியை திமுக கேட்பதால் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

இன்னும் 5 தொகுதிகள் குறித்து மீண்டும் பேச்சு நடத்தப்படும். வேட்பாளா்கள் மிக விரைவில் அறிவிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

விருத்தாசலம் தொகுதி தேமுதிகவுக்கும், தென்காசி தொகுதி திமுகவுக்கும் ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.