ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தொகுதி அறிமுகம்! திருக்கோவிலூர்!

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

வருவாய் நிர்வாக ரீதியில் கள்ளக்குறிச்சியில் அமைந்திருந்தாலும், சட்டப்பேரவைத் தொகுதி ரீதியாக விழுப்புரம் மாவட்டத்தில் இணைந்துள்ள தொகுதி திருக்கோவிலூர்.

பாடல்பெற்ற வைணவத் தலமான உலகளந்த பெருமாள் திருக்கோயில், அட்டவீரத் தலங்களில் ஒன்றான வீரட்டானேசுவரர் திருக்கோயில்கள் திருக்கோவிலூரில் அமைந்துள்ளன. மேலும், புகழ்வாய்ந்த கபிலர் குன்றும் இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது.

திருக்கோவிலூர் நகரப் பகுதிகள் முழுமையாகவும், ஒன்றியப் பகுதிகளில் 20 கிராமங்களும் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன. இவைத் தவிர அரகண்டநல்லூர் பேரூராட்சிப் பகுதிகள், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியின் குறிப்பிட்ட பகுதிகள், கண்டாச்சிபுரம் வட்டம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது திருக்கோவிலூர் தொகுதி. கிராமப்புறங்கள் அதிகம் உள்ள தொகுதி.

1952-இல் உருவாக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதி. 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு முகையூர் தொகுதியாக மாறியது. இதைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு முகையூர் தொகுதி நீக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டில் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியானது.

எதிர்பார்ப்புகள்: திருக்கோவிலூரில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்பெண்ணையாற்றில் தடுப்பணைகள் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். கண்டாச்சிபுரம் தனி வட்டமாகப் பிரிக்கப்பட்டாலும் உரிமையியல் மற்றும் சிவில் நீதிமன்றங்கள் இல்லை. இதனால் மக்கள் திருவெண்ணெயநல்லூர், விக்கிரவாண்டி நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, உரிமையியல், சிவில் நீதிமன்றங்களை கண்டாச்சிபுரத்தில் அமைக்க வேண்டும்.

திருக்கோவிலூரின் சிறப்புவாய்ந்த கபிலர் குன்றை முறையாகப் பராமரிப்பதுடன், கபிலர் கோட்டத்தையும் அமைக்க வேண்டும். திருக்கோவிலூர் பெரிய ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தாலும், அவற்றில் அசுத்தம் அதிகம் காணப்படுகிறது. எனவே, பெரிய ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி, அதன் கரைகளைப் பலப்படுத்துவதுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைப்பாதைகளையும் உருவாக்கித்தர வேண்டும். திருக்கோவிலூர் நகரில் உழவர்சந்தை அமைக்க வேண்டும். திருக்கோவிலூரில் புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

வெற்றி பெற்றவர் விவரம்

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 121023

பெண்கள் 119948

மூன்றாம் பாலினத்தவர் 32

மொத்தம் - 241003

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.