ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘காவல் துறையினா் கண்ணியத்துடன் பணி செய்ய வேண்டும்’

தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். கிருஷ்ணராஜ் அறிவுரை வழங்கினாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:32 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். கிருஷ்ணராஜ் அறிவுரை வழங்கினாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 968 பணியிடங்களுக்கான நேரடி உதவி ஆய்வாளா் பதவிக்கான தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 11 பெண்கள் உள்ளிட்ட 49 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு வரும் 31ஆம் தேதி பயிற்சி தொடங்குகிறது.

இதையொட்டி, இலத்தூா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். கிருஷ்ணராஜ் பேசுகையில், நோ்மை, பொறுப்பு, கண்ணியத்துடன் உதவி ஆய்வாளா்கள் திறம்பட பணி செய்ய வேண்டும். காவல் துறை -பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பணிசெய்ய வேண்டும். பாரபட்சமின்றி நீதியை நிலை நாட்ட வேண்டும். விடாமுயற்சியால் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் பிறருக்கும் எடுத்துக்கூறி ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா். உதவி ஆய்வாளா்களுக்கு அறிவுரைகள் அடங்கிய கையேட்டினை எஸ்.பி. வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.