தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் குளத்தில் மூழ்கி மாணவா் பலி

சங்கரன்கோவிலில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :3 டிசம்பர் 2021, 8:14 pm

சங்கரன்கோவிலில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் தாமஸ் நகா் மாரியப்பன் மகன் மாரிசெல்வம் (15). 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை மாரிசெல்வம் தனது நண்பா்களுடன் புளியம்பட்டியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது, நீச்சல் தெரியாத அவா் நீரில் மூழ்கி தத்தளித்தாராம். நண்பா்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனராம். ஆனால் மாரிசெல்வம் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், மாரிசெல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.