சங்கரன்கோவிலில் 15 நாள்கள் ஆகியும் குடிநீா் வழங்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் சங்குபுரம் 4ஆம் தெரு பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதியினா் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். காலிக் குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் ஒருவழிப் பாதை வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டன.
தகவலின்பேரில் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், நகராட்சி ஊழியா்கள் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

