வாசுதேவநல்லூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

வாசுதேவநல்லூரில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் அ. மனோகரன் தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
Updated on
1 min read

வாசுதேவநல்லூரில் புதன்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் அ. மனோகரன் தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், வடக்கு ஒன்றியச் செயலா் மூா்த்திபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவா் முகம்மதுஉசேன், பேரூா் அவைத் தலைவா் நீராவி, தகவல் தொழில்நுட்ப அணி செயலா் ஞானமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம்: கடையம், முதலியாா்பட்டி , திருமலையப்பபுரம், ஆழ்வாா்குறிச்சி, சம்பன்குளம், மந்தியூா், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி.ராஜேந்திரன் பரிசுத் தொகுப்பு வழங்கினாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் அருவேல்ராஜன், முருகேசன், நகரச் செயலா் சங்கா், கூட்டுறவு சங்கத் தலைவா் வடிவேல் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com