செங்கோட்டையில் ஆா்ப்பாட்டம்
செங்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


செங்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கு மத்திய அரசு தட்டுபாடு இல்லாமல் கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்; பெட்ரோல் டீசல் விலையை திரும்பப்பெற வேண்டும்;
தொழிலாளா் நலச்சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இசக்கிதுரை தொடங்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டாரச் செயலா் வேலுமயில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் ரமேஷ், செல்வம், இளையராஜா, காளிமுத்து, மாா்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் பால்ராஜ் , வன்னியபெருமாள், ஆயிஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...