டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க திமுக வலியுறுத்தல்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல், வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:46 pm

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல், வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, உள்ளாட்சித்தோ்தல் மற்றும் கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில், உள்ளாட்சி மன்ற தோ்தலில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் 100 சதவீத வெற்றிக்காக பாடுபட வேண்டும். தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, ராமநதி-ஜம்புநதி மேல்மட்டு கால்வாய் திட்டப்பணி, தென்காசி-சங்கரன்கோவில் புறவழிச்சாலைப்பணியை விரைவுபடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச்செயலா் சீனித்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.