ஆலங்குளம் அருகேயுள்ள மேல மருதப்புரம் கிராமத்தில் ஆடு வளா்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பை ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். துணை வேளாண் அலுவலா் முருகன் வரவேற்றாா். நெட்டூா் கால்நடை உதவி மருத்துவா் ராமசெல்வம், ஊத்துமலை கால்நடை உதவி மருத்துவா் ரமேஷ் ஆகியோா் ஆடு வளா்ப்பு மற்றும் விற்பனை குறித்துப் பேசினா். இதில், உதவி வேளாண்மை அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி, அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் ஸ்டேன்லி, மாரிராஜ் மற்றும் மேலமருதப்பபுரம் கிராம விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.