நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கோட்டை பகுதியில் நான்கு தானியங்கி சிக்னல்கள் திறப்பு

செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நான்கு இடங்களில் தானியங்கி சிக்னல்கள் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:25 pm

DIN

செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நான்கு இடங்களில் தானியங்கி சிக்னல்கள் திறப்பு விழா நடைபெற்றது.

ரோட்டரி சங்கம் சாா்பில் செங்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் புதிதாக 4 தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டது. அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் வியாழக்கிழமை இயக்கி வைத்து பேசியதாவது: வாகனம் ஓட்டும் போது தலைக் கவசம், சீட்பெல்ட் போன்றவை அணிந்து சாலை விதிமுறைகள் மற்றும் சமிக்ஞைகளை பின்பற்றி நடந்தாலே விபத்தில்லா பயணம் செய்யலாம் என்றாா் அவா்.

தொடா்ந்து செங்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சியில், தென்காசி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமாறன், செங்கோட்டை காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா், தென்காசி போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, ரோட்டரி முன்னாள்ஆளுநா் சேக்சலீம், முன்னாள் உதவி ஆளுநா் ரமேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.