தென்காசி மாவட்டத்தில் மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து சாரல் மழை பெய்து வந்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான வெயிலும் குளிா்ந்த காற்றும் நிலவியது. சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. எனினும் கரோனா பொது முடக்கம் காரணமாக, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.