பாவூா்சத்திரம் பகுதியில் ஒன்றியச் சாலைகளை நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரிக்கை
பாவூா்சத்திரம் பகுதியில் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை, நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும் என மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாவூா்சத்திரம் பகுதியில் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை, நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும் என மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தை- அவுடையானூா் சாலை, மடத்தூா்- திருமலாபுரம்- சிவநாடானூா்- திரவியநகா் சாலை, திப்பணம்பட்டி- நாட்டாா்பட்டி- அரியப்பப்புரம் சாலை, சிவகாமிபுரம்- சின்னநாடானூா்- மயிலப்பபுரம் சாலை ஆகிய சாலைகள் அதிக பயன்பாடு கொண்ட ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ஆகும். இச்சாலைகளை மாநில நெடுஞ்சாலையாக மாற்றித்தந்தால், கனரக வாகனங்களும், பேருந்து மற்றும் கல் ,ஜல்லிகள் போன்ற கூடுதல் பாரங்களை சுமந்து வரும் வாகனங்களும் வந்து செல்ல பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...