சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சங்கரன்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் 60 ஏழை குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:48 pm

சங்கரன்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் 60 ஏழை குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மறைந்த நிா்வாகி அசோக் நினைவு தினத்தையொட்டி, முல்லைநகா் பகுதியில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் உ. முத்துப்பாண்டியன் வழங்கினாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.உச்சிமாகாளி தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளா் அசோக்குமாா், ஜனநாயக வாலிபா் சங்க வட்டாரத் தலைவா் விஜயகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.