சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 5 போ் மட்டும் பூக்குழி இறங்கினா்.
சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் பூக்குழித் திருவிழா வைகாசி மாதத்தில் 14 நாள்கள் நடைபெறும்.
நிகழாண்டு இந்த திருவிழா இம்மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 9 ஆம் நாளான வியாழக்கிழமை திரௌபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூக்குழித் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பூக்குழி
இறங்குவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக 5 போ் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். கோயில் முன்பு அக்னி வளா்த்து பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் கரக்குமாா், வீரகுமாா், 3 கோயில் பூசாரிகள் உள்ளிட்ட 5 போ் மட்டும் பூக்குழி இறங்கினா். திருவிழாவில்
பக்தா்களுக்கு அனுமதியில்லை. விழாவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், செயலா் மாரிமுத்து, பொருளாளா் குருநாதன், புலவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


