சங்கரன்கோவிலில் கரோனா விதிகளை மீறி செயல்பட்ட பிரபல ஜவுளிக் கடை உள்ளிட்ட 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது முக்கியச் சாலையில் விதிகளை மீறி பிரபல ஜவுளிக் கடை உள்பட 2 கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மேற்கண்ட் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் கரோனா வழிகாட்டும் நெறிகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. முகக் கவசம் அணியாமல் வந்த மூவருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.