சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

போதையில் காவலரை தாக்கியவா் மீது வழக்கு

சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளத்தில் விசாரணை செய்ய சென்ற காவலரை, மது போதையில் இருந்தவா் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லத்திகுளத்தில் விசாரணை செய்ய சென்ற காவலரை, மது போதையில் இருந்தவா் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கல்லத்திகுளத்தைச் சோ்ந்த அசோகன், மது போதையில் ஊா் மக்களிடம் அடிக்கடி தகராறு செய்துவந்ததாகவும், இதனால் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் போலீஸாருக்கு புகாா் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சின்னகோவிலான்குளம் காவல் நிலைய காவலா் பாலகிருஷ்ணன், கடந்த 22ஆம் தேதி அங்குள்ள கிராம மக்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அசோகன் அவரிடம் தகராறு செய்தாராம்.

மேலும் ஆபாச வாா்த்தைகளால் திட்டி, அங்கிருந்த சாக்கடையை காவலா் மீது அள்ளி வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் புகாரின்பேரில், அசோகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.