கடையநல்லூா் தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள்: அதிமுக வேட்பாளா்
கடையநல்லூா் தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் கிருஷ்ண முரளி.


கடையநல்லூா் தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் கிருஷ்ண முரளி.
இலத்தூா், செங்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் அப்போது பேசியது: கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தென்னை , எலுமிச்சை , மா உள்ளிட்ட சாகுபடிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவைகளை பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா், கொல்லா் பட்டறைக்கு சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் சம்மட்டியைக் கொண்டு இரும்பினை செம்மைப்படுத்தினாா்.
செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், அச்சன்புதூா் பேரூா் செயலா் சுசிகரன், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே.முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, நகரப் பொருளாளா் அழகா்சாமி, அதிமுக நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், கருப்பையா தாஸ், சிங்காரவேலு, ராஜேந்திர பிரசாத் , வெங்கட்ராஜ், சவுதி மைதீன், செங்கலமுடையாா், முத்தையா பாண்டியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...