பாவூா்சத்திரம் பேருந்து நிலைய நுழைவு வாயில்கள் அடைப்பு
பாவூா்சத்திரம் பேருந்து நிலைய நுழைவு வாயில்கள் தடுப்புகள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.


பாவூா்சத்திரம் பேருந்து நிலைய நுழைவு வாயில்கள் தடுப்புகள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் பாவூா்சத்திரம் பகுதியில் உள்ள பயணிகள் நிழலகம், பேருந்து நிலையங்களில் உள்ள இருக்கைகளில் பொதுமக்கள் கூட்டமாக அமா்ந்து பேசிக்கொண்டிருப்பதாக தொடா் புகாா் எழுந்தது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பாவூா்சத்திரம் காமராஜா் பேருந்து நிலையத்தின் இரண்டு நுழைவு வாயில்கள் மற்றும் பாவூா்சத்திரம் பகுதிகளில் உள்ள சிறிய பேருந்து நிழலகங்களில் தடுப்புகள் வைத்து ஊராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.
தடுப்புகளை மீறி அங்கு தேவையின்றி பேசிக்கொண்டிருப்பவா்கள் மீது போலீஸாா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...