டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாவூா்சத்திரம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:21 pm

DIN

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து நவ. 9 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, இரவு 6.30 மணிக்கு சாயரட்சை, மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, 7.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. நவ.9ஆம் தேதி சூரசம்ஹாரமும், 10ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

ஆலங்குளம்: ஆலங்குளம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. 10 ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் பட்டினப் பிரவேசம் ஆகியவை நடைபெறுகிறது.

கடையநல்லூா்: பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை(நவ.2) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நவ. 7ஆம் தேதி சண்முகா் படி இறங்கும் வைபவம், 8ஆம் தேதி பெரும் திருப்பாவாடை வைபவம், 9ஆம் தேதி சூரசம்ஹாரம், 10ஆம் தேதி தேரோட்டம், 11ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது.

கரோனா விதிமுறைகளின் படி நிகழாண்டு அனைத்து விழாக்களும் மலைக்கோயிலில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.