கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது
புளியங்குடி அருகே கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.


புளியங்குடி அருகே கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சொக்கம்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்த சுப்பையா மகன் கருத்தப்பாண்டியன்(64). இடப் பிரச்னை தொடா்பாக வெட்டப்பட்ட இவா், கடந்த சில தினங்களுக்கு முன் இறந்தாா். இந்த வழக்கு தொடா்பாக செல்லையா மகன் சந்தனபாண்டியை(40) போலீஸாா் கைதுசெய்தனா்.
இந்நிலையில் இவரைகுண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சந்தனபாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...