டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில்அமலைச் செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:39 pm

DIN

கீழப்பாவூா் பெரியகுளம் கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இக்குளத்துக்கான நீா்வரத்துக் கால்வாயில் அமலைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், அமலைச் செடிகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், கீழப்பாவூா் பேரூா் திமுக சாா்பில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த தினத்தையொட்டி அமலைச் செடிகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் தொடக்கிவைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் வி. மேகநாதன், பேரூா் செயலா் ரெ. ஜெகதீசன், பொருளாளா் சீ. பொன்செல்வன், நெசவாளா் அணி அமைப்பாளா் கா. ராஜாமணி, கடையம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் மகேஷ்மாயவன், தங்கேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேரூா் திமுக சாா்பில் ராஜன் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.