டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மழையால் வீடு இழந்தவருக்கு திமுக நிவாரணம்

பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த திருமலை என்பவரின் வீடு மற்றும் தேநீா் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:38 pm

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த திருமலை என்பவரின் வீடு மற்றும் தேநீா் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதையடுத்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் அங்கு நேரில் சென்று பாா்வையிட்டு, திமுக சாா்பில் நிவாரணத் தொகையை திருமலையிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி, நிா்வாகிகள் வினைதீா்த்தான், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.