சிறப்பு பொது மருத்துவ முகாம்
பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவ முகாம், புல்லுக்காட்டுவலசை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவ முகாம், புல்லுக்காட்டுவலசை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் , ஒன்றியக்குழு உறுப்பினா் ஜான்சி ஜெயமலா், ஊராட்சித் தலைவா் சுபாசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சீ.காவேரி சீனித்துரை பங்கேற்று, முகாமை தொடங்கி வைத்தாா்.
மருத்துவா்கள் தேவி, சம்சூல், சிவசந்திரன், சுபா, தமிழ்முதல்வி மற்றும் குழுவினா் சிகிச்சை அளித்தனா். எலும்பு முறிவு, தோல், கண், ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, ஸ்கேன், மகளிா் மற்றும் குழந்தை மருத்துவம் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகமும், சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகமும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...