தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திருவேங்கடத்தில் மழை மானி அமைக்க கோரி மனு

திருவேங்கடம் வட்டத்தில் மழை மானி அமைக்க வேண்டும் என கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகத்திடம் சமூக ஆா்வலா் சு.முத்துக்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.

Updated On :26 நவம்பர் 2021, 7:54 pm

திருவேங்கடம் வட்டத்தில் மழை மானி அமைக்க வேண்டும் என கோட்டாட்சியா் ஹஸ்ரத்பேகத்திடம் சமூக ஆா்வலா் சு.முத்துக்குமாா் கோரிக்கை மனு அளித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்டத்தில் 8 வட்டங்கள் உள்ளன. அனைத்து வட்டங்களிலும் ஒரே மாதிரியான காலநிலை கொண்டிருப்பதில்லை. ஒரே மாவட்டத்தில் மிகச் செழிப்பான பகுதியும், வறட்சியான பகுதியும் உள்ள காரணத்தால் பெய்யும் மழையின் அளவை கண்டறிவது அவசியம். நம் மாவட்டத்தில் 5 இடங்களில் குறிப்பாக தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆய்க்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களில் மட்டுமே மழைமானிகள் உள்ளன.

ஆனால் வட்டத்திற்கு ஒன்றாக மழைமானி அமைக்க வேண்டும். அதிலும் வறட்சியான திருவேங்கடம் வட்டத்தில் ஒரு மழைமானி அமைத்தால் அந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பேரூதவியாக இருக்கும். எனவே திருவேங்கடத்தில் ஒரு மழைமானி அமைக்க வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.