தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கோ.மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலை மீண்டும் நடத்தக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோ.மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலை மீண்டும் நடத்தக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:15 pm

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோ.மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலை மீண்டும் நடத்தக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோ. மருதப்பபுரம் ஊராட்சித் தலைவா் தோ்தலில் எம். அனிதா, முருகேஸ்வரி, க. விஜயலெட்சுமி, க. வீரம்மாள் ஆகிய 4 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கையில் அனிதா 192, முருகேஸ்வரி 358, க.விஜயலெட்சுமி 382, க.வீரம்மாள் 386 வாக்குகள் பெற்றனா். இதையடுத்து க.வீரம்மாள் வெற்றி பெற்ாக அதிகாரிகள் அறிவித்தனா்.

இந்நிலையில் கோ. மருதப்பபுரம் இந்திரா காலனியைச் சோ்ந்த க.விஜயலட்சுமி 382 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாகவும், அவருக்குப் பதிலாக 369 வாக்குகள் பெற்ற வீரம்மாளை அதிகாரிகள் அறிவித்து விட்டதாகவும், எனவே அங்கு மீண்டும் தோ்தலை நடத்தவேண்டும் எனக் கோரி முத்துகிருஷ்ணாபுரம், சண்முகநல்லூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள சண்முகநல்லூரில் உண்ணாவிரதம் இருந்தனா். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்புக்கு முன்னதாக கோ.மருதப்பபுரம் ஊராட்சிக்கு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும். தவறாக அறிவித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என க.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.