சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘நெல்லை-தென்காசி 4வழிச் சாலையில் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது’

 தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜா.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:16 pm

DIN

 தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜா.

ஆலங்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தீபாவளி நேரம் என்பதால் விதி மீறல்கள் எனக் கூறி எந்தக் கடைகளுக்கும் அபராதம் விதிக்கக் கூடாது. பண்டிகைக் காலங்களில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். தென்காசி நான்குவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலையிலும் சுங்கச் சாவடி அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடா்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். ஆலங்குளத்தில் காய்கனி பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா் அவா்.

அப்போது, வணிகா் சங்க பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா, மாநில இணைச் செயலா் நயன்சிங், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாஸ், திருநெல்வேலி மண்டலத் தலைவா் சுப்பிரமணியன், தென்காசி மாவட்டச் செயலா் கணேசன், திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.