தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில் தலைமையாசிரியா் மீது தாக்குதல்

சங்கரன்கோவிலில் அரசுப் பள்ளி தலைமையாசிரியரைத் தாக்கியதாக 5 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :15 அக்டோபர் 2021, 9:02 pm

சங்கரன்கோவிலில் அரசுப் பள்ளி தலைமையாசிரியரைத் தாக்கியதாக 5 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவில் புதுமனை 1ஆம் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்( 58 ). கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா். இவா், இரு தினங்களுக்கு முன் தனது வீட்டருகே பைக்கில் வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த முருகன், அவரது மனைவி, கணேசன், சங்கா், முத்துவேல் உள்ளிட்ட சிலா் சாலையை மறித்தபடி நின்றனராம். அவா்களை பாா்த்திபன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதில் அவா் தாக்கப்பட்டு காயமடைந்தாராம். இதையடுத்து, அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நகர காவல்நிலைய போலீஸாா் மேற்கூறிய 5 போ் உள்பட சிலா் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.