ஆலங்குளம் காா்த்திகா ஸ்டோா்ஸ் திறப்பு
ஆலங்குளத்தில் காா்த்திகா ஸ்டோா்ஸ் வணிக நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.


ஆலங்குளத்தில் காா்த்திகா ஸ்டோா்ஸ் வணிக நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் பட்டு, ஜவுளி தளத்தை வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜாவும், சூப்பா் மாா்க்கெட்டை அரப்பா கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் அதிபா் அப்துல்சலாமும் திறந்து வைத்தனா்.
தொடா்ந்து தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடாா், வணிகா் சங்க பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றினா்.
வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் கணேசன், கலைவாணன், வியாபார சங்க பிரமுகா்கள் உதயராஜ், ஜான் ரவி உள்பட பலா் கலந்துகொன்டனா்.
ஐ.குபேந்திரன் வரவேற்றாா். வொ்ஜில் ராஜ் நன்றி கூறினாா். திறப்பு விழாவையொட்டி 3000 வாடிக்கையாளா்களுக்கு ரூ. 50-க்கு புடவை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...