சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காட்டுப் பன்றி வேட்டையாடியவருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகிரி தெற்குப்பிரிவில் சிவகிரி பீட் எல்லைக்குள்பட்ட தனியாா் கரும்புத் தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்து வன உயிரினங்களை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகிரி வனசரகா் சுரேஷ் தலைமையில், சிவகிரி தெற்குப்பிரிவு வனவா் அஜித்குமாா், வடக்குப்பிரிவு வனவா் மகேந்திரன், வனக்காப்பாளா்கள் சுதாகா், இமானுவேல், பெருமாள், அருண்மொழி பிரதீப், வனக்காவலா்கள் செல்வராஜ், மணிகண்டன் உள்ளிட்ட

குழுவினா் அப்பகுதியில் ஆய்வுமேற்கொண்டனா். அப்போது, அந்த தோட்டத்திலிருந்த வீரையாவிடம் விசாரணை நடத்தினா். இதில், தோட்டத்தில் மின்வேலி அமைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.