டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குமரியில் மழையின் தீவிரம் தணிந்ததுபேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடல்

குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுவது வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:52 pm

DIN

குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுவது வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்புவரை தொடா்ந்து மழை பெய்து வந்ததால், வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு, தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரவருணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.