சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் அருகே 2 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் சடலம் தோண்டியெடுப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டியெடுக்கும் பணி (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஏப்ரல் 2022, 7:05 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டியெடுக்கும் பணி (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள நொச்சிகுளத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து. சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (38). இவருக்கும், வடநத்தம்பட்டியைச் சோ்ந்த சசிகுமாா் என்பவருக்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டதாம். இதில், முத்துமாரிக்கு 2018இல் பெண் குழந்தை பிறந்ததாகவும், அதை அவா் குளத்தில் வீசிச் சென்ாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் சோ்ந்தமரம் போலீஸாா் சென்று, குளத்தில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, அடக்கம் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து முத்துமாரியைத் தேடிவந்தனா்.

2019ஆம் ஆண்டு முத்துமாரிக்கு மீண்டும் ஓா் ஆண் குழந்தை பிறந்ததாகவும், அவா் அதைக் கொன்று வீட்டருகிலேயே புதைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி கிராம நிா்வாக உதவியாளா் கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துமாரி, சசிகுமாா் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, குழந்தையின் சடலத்தைத் தோண்டியெடுக்க அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துவந்தனா். சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக பாளையங்கோட்டை சிறையிலுள்ள சசிகுமாரையும், கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலுள்ள முத்துமாரியையும் போலீஸாா் வியாழக்கிழமை நொச்சிகுளத்துக்கு அழைத்து வந்தனா்.

அவா்கள் அடையாளம் காட்டிய இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அந்தக் குழிக்குள் உரச்சாக்குப் பையில் எலும்புத் துண்டுகள் இருந்தன. அவற்றை மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா். போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.