நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநில தடகளம்: வாசுதேவநல்லூா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் தோ்வு

தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:15 pm

DIN

தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கணக்கப்பிள்ளை வலசையில் நடைபெற்றன.

இதில், வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா் மாதவன் நின்ற நிலையில் நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், மாணவி முனியசெல்வி 50 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாம் இடமும், குண்டு எறிதலில் சுரேஷ் மூன்றாம் இடமும், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் முனியசெல்வி முதலிடமும், லட்சுமி இரண்டாம் இடமும் பெற்றனா்.

இதில், மாதவனும், முனியசெல்வியும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். இவா்களை பள்ளித் தாளாளா் தவமணி, ஆசிரியா்கள் சங்கர சுப்பிரமணியன், சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா்கள் முத்துலட்சுமி, முத்துமாரி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.