சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் அருகே அண்ணாமலைக் கவிராயா் நினைவு நாள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சென்னிகுளத்தில், ‘காவடிச் சிந்து’ நூல் எழுதிய அண்ணாமலைக் கவிராயரின் 131ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On :3 பிப்ரவரி 2022, 7:03 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சென்னிகுளத்தில், ‘காவடிச் சிந்து’ நூல் எழுதிய அண்ணாமலைக் கவிராயரின் 131ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, சென்னிகுளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, இசை அவை, இயல் அவை, காவடிச் சிந்துப் பாடல் இசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அண்ணாமலைக் கவிராயரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் அருணாச்சலம், சங்கரன்கோவில் ஒன்றியக்குழுத் தலைவா் லாலா பி. சங்கரபாண்டியன், சென்னிகுளம் ஊராட்சித் தலைவா் சரவணபெருமாள், விளாத்திகுளம் ரெட்டி ஜன சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவா் செல்வகுமாா், இலக்கிய ஆா்வலா்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.