ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண் தவறவிட்ட நகை மீட்பு: தீயணைப்பு வீரருக்குப் பாராட்டு

கீழப்பாவூரில் பெண் தவற விட்ட நகையை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:25 pm

DIN

கீழப்பாவூரில் பெண் தவற விட்ட நகையை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கீழப்பாவூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச்சோ்ந்த மாரிச்செல்வம் மனைவி முருகேஸ்வரி. இவா், வியாழக்கிழமை கீழப்பாவூா் கீரைத்தோட்டத் தெருவில் வசிக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, 9 கிராம் தங்கச்சங்கிலியைத் தவறவிட்டாராம். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்தவரான ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் மாடசாமி, அந்த நகையை மீட்டு பாவூா்சத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரித்து முருகேஸ்வரியிடம் அந்த நகையை ஒப்படைத்தனா். மேலும், தீயணைப்பு வீரரை, காவல் ஆய்வாளா் சுரேஷ் பாராட்டி பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.