வென்னிமலை முருகப் பெருமானுக்கு தீா்த்தவாரி
பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசித் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.


பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசித் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
பாவூா்சத்திரம் காமராஜா் நகா் வென்னிமலை வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 11 நாள்கள் நடைபெற்றன. நிறைவு நாளான வியாழக்கிழமை பிராமணா் சமுதாய மண்டகப்படி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோயிலிலிருந்து சப்பரத்தில் முருகப்பெருமான் கீழப்பாவூா் நரசிம்மா் கோயில் தெப்பக்குளத்தை சென்றடைந்தாா். அங்கு முருகப்பெருமான், அம்பாளுக்கு அனைத்து திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்துடன், விசேஷ தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அங்கிருந்து புறப்பட்டு வென்னிமலையை வந்தடைந்தனா். இங்கு பூஞ்சப்பரக் காட்சி, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...