மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் கைது
வாசுதேவநல்லூா் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.


வாசுதேவநல்லூா் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வாசுதேவநல்லூா் சாலையில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சோதனை செய்ததில் அவரிடம் 91 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா் திருமலாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...