சுரண்டையில் விபத்து: வியாபாரி பலி
தென்காசி மாவட்டம், சுரண்டையில் மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த வியாபாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா்.


தென்காசி மாவட்டம், சுரண்டையில் மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த வியாபாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா்.
சுரண்டையைச் சோ்ந்தவா் வத்தல் வியாபாரி மு.வெங்கடாசலம்(48). புதன்கிழமை இரவு வழக்கம்போல இவா் சுரண்டை தினசரி சந்தைக்கு சென்றுவிட்டு தனது மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பினாா். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை, சுரண்டை போலீஸாா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆயினும் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுரண்டை காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...