ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

பாபநாசம்-சங்கரன்கோவில் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:13 pm

DIN

பாபநாசம்-சங்கரன்கோவில் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், போக்குவரத்து துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் அளித்துள்ள மனு: பாபநாசத்தில் இருந்து கீழப்பாவூா் ஒன்றியம் பூலாங்குளம், செல்லத்தாயாா்புரம், பெத்தநாடாா்பட்டி, மகிழ்வண்ணநாதபுரம், பாவூா்சத்திரம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு 2 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ஒரு பேருந்து மட்டுமே இயங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே நிறுத்தப்பட்ட மற்றொரு பேருந்தினை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.