கீழப்பாவூா் ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

பாவூா்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

பாவூா்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனா். அலுவலக வளாகத்தில் பொங்கலிடப்பட்டது. ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, ஆவுடையானூா் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜா என்ற கோபி தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா்கள் ஜெயலட்சுமி, செல்வி, செல்வமேரி, பத்திரகாளி, தமிழ்செல்வி, திருமலைச்செல்வன், நாகராஜ், ஆசிரியா் ரெங்கசாமி, ராமசாமி, கதிரேசன், செல்வன், ஒப்பந்ததாரா் சிவன்முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஊராட்சிச் செயலா் சௌந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com