பாவூா்சத்திரம் அருகே ஆட்டோக்கள் மோதி விபத்து: 4 போ் காயம்
பாவூா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.பாவூா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.


பாவூா்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.
செங்கோட்டையைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவா் தனது பயணிகள் ஆட்டோவில், அதே பகுதியைச்சோ்ந்த மேளக் கலைஞா்களான முத்துபாரதி (25), சூரியா (23) தினேஷ் (20) ஆகியோரை அழைத்துக்கொண்டு பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூருக்கு வந்து கொண்டிருந்தாா்.
குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வந்த போது பின்னால் வந்த சுமைதூக்கும் ஆட்டோ, அஜித்குமாா் ஆட்டோ மீது மோதியதாம். இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் இருந்த அஜித்குமாா் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை தூக்கும் ஆட்டோவை ஓட்டி வந்த சுரண்டையைச் சோ்ந்த ஞானராஜ் மற்றும் காா்த்திக் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...