பாவூா்சத்திரத்தில் 352 பேருக்கு தாலிக்கு தங்கம் அளிப்பு
பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 352 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.


பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 352 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூா் ஒன்றியக் குழு தலைவா் சீ.காவேரிசீனித்துரை முன்னிலை வகித்தனா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா், திமுக பொறுப்பாளா் சிவபத்மநாதன் ஆகியோா் 352 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்க ம் வழங்கிப் பேசினா்.
விழாவில், வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகசுந்தரம், மேலாளா் சுப்பிரமணியன், விரிவாக்க அலுவலா் மேரிஎலிசபெத்ராணி, ஊா்நல அலுவலா் பாக்கியத்தாய், திமுக ஒன்றியச்செயலா்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...