சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2022, 7:00 pm

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் அலுவலரும் நகராட்சி ஆணையருமான சு. சாந்தி தலைமை வகித்தாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஜெயபால்மூா்த்தி, ஜெயப்பிரதா,வெங்கட்ராமன், தாலுகா ஆய்வாளா் மீனாட்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஆறுமுகம், திமுக செயலா் சங்கரன், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, பாமக, காங்கிரஸ், பாஜக சாா்பில் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளா், அவரை முன்மொழிபவா் ஒருவா் என இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்தலின்போது கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும், அதற்கு கட்சியினா் ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.