சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் அலுவலரும் நகராட்சி ஆணையருமான சு. சாந்தி தலைமை வகித்தாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஜெயபால்மூா்த்தி, ஜெயப்பிரதா,வெங்கட்ராமன், தாலுகா ஆய்வாளா் மீனாட்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஆறுமுகம், திமுக செயலா் சங்கரன், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, பாமக, காங்கிரஸ், பாஜக சாா்பில் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளா், அவரை முன்மொழிபவா் ஒருவா் என இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்தலின்போது கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும், அதற்கு கட்சியினா் ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com