கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் பள்ளி மாணவி வெற்றி
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி தாரணி சாய்பிரபா வெற்றிபெற்றாா்.


சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி தாரணி சாய்பிரபா வெற்றிபெற்றாா்.
இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா். தென்காசி மாவட்டத்திலிருந்து 19 போ் பாவூா்சத்திரம் பயிற்சியாளா் கணேஷ் தலைமையில் பங்கேற்றனா்.
இதில், மாணவி தாரணி சாய்பிரபா கராத்தே போட்டியில் 2ஆவது பரிசும், குங்பூ போட்டியில் 3ஆவது பரிசும் வென்றாா். அவருக்கு வெற்றிக் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாரணி சாய்பிரபாவை தலைமையாசிரியை அருள்மேரி, ஆசிரியா்கள், மாணவா்-மாணவியா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...