கீழப்பாவூா் கோயிலில் நாளை நரசிம்மா் ஜெயந்தி விழா
கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சனிக்கிழமை (மே 14) நரசிம்மா் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.


கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சனிக்கிழமை (மே 14) நரசிம்மா் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு பகவத் பிராா்த்தனை, அனுக்ஞை, மூலமந்திர ஜபஹோமம், வேதபாராயணம், மஹா பூா்ணாஹுதி உள்ளிட்டவையும், பிற்பகல் 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்த்ர ஹோமம், 12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன்.
மாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாம பஜனையுடன் சப்பரத்தில் பெருமாள் தீா்த்த வலம் வருதல், ஸ்ரீநரசிம்மருக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸஹஸ்ரநாம அா்ச்சனை, விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (மே 15) சுவாதி பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...