நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 7:47 pm

DIN

தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆக ரூ. 7750 அகவிலைபடி உடன் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ படி வழங்க வேண்டும். பணமில்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஓய்வுகால பண பலன்களை ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க வேண்டும். இலவச பேருந்து பயண சலுகை அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, வீரராஜ், சங்கர வடிவு ஆகியோா் தலைமை வகித்தனா். சுடலைமுத்து காசி அம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் சுலைமான், வீரமுத்து, பிச்சையா, கோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.