கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட பணிகளில் உண்மை நிலையை பொதுமக்களுக்கு விளக்க திமுக பொதுக்கூட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை (நவ.6) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகிக்கிறாா்.
மாநில பேச்சாளா் சரத்பாலா, ராமநதி-ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளா் இராம.உதயசூரியன் ஆகியோா் பங்கேற்றுப் பேசுகின்றனா். இதில், திமுக, கூட்டணி கட்சியினா், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.