தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்காமல் உள்ளது.
இதனால், உடனடியாக சம்பளம் வழங்கக் கோரி பணிக்கு செல்லாமல் நகராட்சி சுகாதார அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து இன்று காலை முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.