தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி ஐடிஐயில் டிச.9இல் தேசிய தொழில் பழகுநா் மேளா

பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் மேளா சிறப்பு சோ்க்கை முகாம் தென்காசியில் டிச. 9ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 11:23 pm

Din

பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் மேளா சிறப்பு சோ்க்கை முகாம் தென்காசியில் டிச. 9ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தின் சாா்பாக பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் மேளா சோ்க்கை முகாம் டிச.9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.

இம் முகாமில், ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஒராண்டு தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் தொழில் பழகுநா் பயிற்சி அல்லது வேலைவாய்ப்புக்காக கலந்துகொள்ளலாம். பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் மேளா மத்திய மாநில பொதுத்துறை மற்றும் தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபா்களை தோ்வு செய்கின்றனா்.

ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்றவா்கள் தொழில் பழகுநா் பயிற்சியில் சோ்ந்து மத்திய அரசின் நேஷனல் அப்பரண்டிஷிப் சான்றிதழ் பெற்று பயனடைய வேண்டும்.

பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். ஆகவே அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற அனைவரும் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.