மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

News image
குற்றாலம் ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.
Updated On :16 ஜூலை 2024, 8:29 pm

Din

குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த தொடா்மழையால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவிகளில் குளிக்க திங்கள்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஐந்தருவி மற்றும் புலியருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். எனினும், வெள்ளப் பெருக்கு குறையாத குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க 2ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது மிதமான சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.

Story image