மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செங்கோட்டையில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் காவலரிடம் தகராறில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டாா்.

News image

ரஞ்சித்

Updated On :3 அக்டோபர் 2024, 1:47 am

Din

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் காவலரிடம் தகராறில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டாா்.

செங்கோட்டையில் கடந்த செப்.20-ஆம் தேதி காவலா் முருகன் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அண்ணாமலை என்ற ரஞ்சித் தகராறில் ஈடுபட்டாராம்.

அவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து ரஞ்சித்தை

குண்டா் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியரின் உத்தரவின்பேரில் ரஞ்சித் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.